/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
/
காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED : செப் 10, 2024 05:08 AM
ஒகேனக்கல்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, தர்மபுரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகளை மக்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இச்சிலைகளை, 3வது நாளான நேற்று ஆற்றில் கரைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, ஒகே-னக்கல் மற்றும் நாகமரை காவிரியாற்றில் சுவாமி சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை முதலே ஒகேனக்கல் முதலைப்பன்ணை எதிரே காவிரியாற்றில், பெரிய சிலைகள்
கிரேன் உதவியோடு ஆற்றில் கரைக்கப்பட்டன. மாலை, 5 மணி நிலவரப்படி, ஒகேனக்கல்லில், 460 சிலைகளும், நாகமரை காவிரியாற்றில், 63 சிலைகளும் கரைக்கப்பட்டன. சிறிய, சிறிய சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர்
நிலைகளில் கரைக்-கப்பட்டன.
பென்னாகரம் பொறுப்பு டி.எஸ்.பி., ராஜாசுந்தரம், ஆயுதப்படை டி.எஸ்.பி., சத்தியமூர்த்தி தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், வருவாய் துறை அதிகா-ரிகள் மற்றும் பரிசல் ஓட்டிகள் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்-தனர்.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை, இரு-மத்துார், டி.அம்மாபேட்டை ஆகிய இடங்களில் உள்ள தென்-பெண்ணையாற்றில் சிலைகளை கரைக்க, மக்கள் மற்றும் பல்-வேறு அமைப்பினர், வாகனங்களில் கொண்டு வந்து
கரைத்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் இப்-பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.