sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

 பாலினம் கண்டறிந்த வழக்கு மூன்று பேருக்கு 'குண்டாஸ்'

/

 பாலினம் கண்டறிந்த வழக்கு மூன்று பேருக்கு 'குண்டாஸ்'

 பாலினம் கண்டறிந்த வழக்கு மூன்று பேருக்கு 'குண்டாஸ்'

 பாலினம் கண்டறிந்த வழக்கு மூன்று பேருக்கு 'குண்டாஸ்'


ADDED : டிச 05, 2025 04:25 AM

Google News

ADDED : டிச 05, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய வழக்கில், பெண் உட்பட இருவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில், தற்காலிக செவிலியர் பரிமளா என்பவரின் உதவியுடன், இடைத்தரகர் வடிவேல் உள்ளிட்டோர் மூலம், கர்ப்பிணியரின் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து கூறப்பட்டது.

இந்த வழக்கில், ஆந்திராவை சேர்ந்த கிளாரா மேனகா தேவி, 41, பிரதீப், 26, ஆகியோரை நவ., 17ல் பாலக்கோடு போலீசார் கைது செய்தனர்.‍ தற்காலிக செவிலியர் பரிமளா, வடிவேல் உள்ளிட்ட மூன்று பேர் தலைமறைவாகினர்.

இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வரும், கிளாரா மேனகா தேவி மற்றும் பிரதீப் ஆகிய இருவர் மீதும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் பரிந்துரை படி, மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டார்.

இதையடுத்து, தர்மபுரி சிறையிலுள்ள, கிளாரா மேனகா தேவி, பிரதீப் ஆகியோரிடம், அதற்கான நகலை போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us