/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் 8ம் தேதி முதல் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
/
தர்மபுரியில் 8ம் தேதி முதல் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
தர்மபுரியில் 8ம் தேதி முதல் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
தர்மபுரியில் 8ம் தேதி முதல் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
ADDED : ஏப் 01, 2024 03:45 AM
தர்மபுரி: இந்திய அரசு நிறுவனம் சார்பில், தர்மபுரியில், வாசுகவுண்டர் வீதியில், செந்தில் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் அருகே, சாந்தி ஹார்டுவேர்ஸ் எதிரில், ஜே.ஆர்.காம்ப்ளக்ஸ், நெ.7, 2வது மாடியில் உள்ள இ.பி.ஆர்., எஜூகேஷன் பாய்ன்ட் பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும், 8ம் தேதி முதல், 15-ம் தேதி வரை, 8 நாட்கள் பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரைகல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து, பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது, 8-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சி இறுதியில், இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள், தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளாராகவும் பணியில் சேரலாம். மேலும், சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில், நகை மதிப்பீட்டாளாராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம்.
பயிற்சியில் சேர விரும்புவர்கள், 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ், பயிற்சி கட்டணம், 7,000 ரூபாய் ஜி.எஸ்.டி., 18 சதவீதம் சேர்த்து, 8,260 ரூபாய். கூடுதல் விபரங்கள் பெற, 94437 28438 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

