/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாத அரசு பஸ்கள்
/
அரூர் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாத அரசு பஸ்கள்
ADDED : ஜூன் 12, 2025 01:48 AM
அரூர், சேலத்தில் இருந்து, இயக்கப்படும் அரசு பஸ்கள் அரூர் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல மறுப்பதால் அவதிப்படுவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: சேலத்தில் இருந்து, அரூர் வழியாக, வேலுார், சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவில், அரூர் வழியாக, செல்லும் அரசு பஸ்களில், அரூர் செல்லும் பயணிகளை ஏற்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மறுப்பு தெரிவிக்கின்றனர். காலியான இருக்கைகளுடன் பஸ்கள் சென்றாலும் கூட, அரூர் பயணிகளை ஏற்றுவதில்லை. மேலும், பயணிகளை ஏற்றினாலும், அரூர் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல், கச்சேரிமேட்டில் மக்களை இறக்கி விட்டு பைபாஸ் சாலை வழியாக பஸ்கள் சென்று விடுகின்றன.
இதனால், இரவு நேரத்தில் குழந்தைகளுடன் வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோர், மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, அரூர் பஸ் ஸ்டாண்டிற்குள் அரசு பஸ்கள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.