பாப்பிரெட்டிப்பட்டி, : பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடசமுத்-திரம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்-னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் மாரப்பன் தலைமையில் நடந்-தது. கூட்டத்தில் வரவு செலவு, மாற்றுத்திறனா-ளிகள் பட்டியல், ஜல்ஜீவன் இயக்கம், பொது சுகா-தாரம், வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உதவி இயக்குனர் (பயிற்சி) கார்த்திகா, பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணன், மொரப்பூர் மண்டல உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராசாத்தி ,துரைசாமி மோகனா, யுவராஜ் உள்-ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செய-லாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். இதே போன்று மோளையானூர், பட்டுகோணாம்பட்டி உள்ளிட்ட,19 ஊராட்சிகளிலும், கடத்தூர் ஒன்றி-யத்தில், 25 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

