sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மயான கொள்ளை திருவிழா தேர்; பாலாற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு

/

மயான கொள்ளை திருவிழா தேர்; பாலாற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு

மயான கொள்ளை திருவிழா தேர்; பாலாற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு

மயான கொள்ளை திருவிழா தேர்; பாலாற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு


ADDED : மார் 11, 2024 07:03 AM

Google News

ADDED : மார் 11, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் : வேலுாரில் நடந்த மயான கொள்ளை திருவிழாவில், 60 அடி உயர தேர் கவிழ்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

வேலுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை, மயான கொள்ளை திருவிழா பல்வேறு பகுதியில் நடந்தது. இதையொட்டி வேலுார் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து, 50க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் தேர் மற்றும் பல்வேறு வாகனங்களில் வேலுாரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பாலாறு சென்றடைந்தது. அம்மன் ஊர்வலத்தை காண, 10,000க்கும் மேற்பட்டோர் பாலாற்றில் குவிந்தனர். நள்ளிரவு, 12:00 மணி வரை விழா நடந்தது. அதன்பின் அலங்கரிக்கப்பட்ட தேர் மற்றும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட அங்காளம்மன் சுவாமி மீண்டும், அந்தந்த பகுதி கோவிலுக்கு திரும்பின.

இதில் மோட்டூர் திரும்பிய, 60 அடி உயர அங்காளம்மன் தேர், பாலாற்று பகுதியில் கவிழ்ந்தது. இந்த இடிபாடுகளில் மோட்டூரை சேர்ந்த விமல்ராஜ், 30, சிக்கினார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us