sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்க தர்மபுரி 4 ரோட்டில் கிரீன் பந்தல் அமைப்பு

/

வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்க தர்மபுரி 4 ரோட்டில் கிரீன் பந்தல் அமைப்பு

வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்க தர்மபுரி 4 ரோட்டில் கிரீன் பந்தல் அமைப்பு

வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்க தர்மபுரி 4 ரோட்டில் கிரீன் பந்தல் அமைப்பு


ADDED : ஏப் 20, 2025 01:36 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:

வாகன ஓட்டிகளை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, நான்கு ரோடு சிக்னலில், கூரையாக கிரீன் பந்தல் அமைக்கும் பணி, தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் நடந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2 மாதங்களாக வெயில் வாட்டி வருகிறது. கடந்த வாரங்களில், ஒரு சில நாட்கள் மட்டும் மிதமான மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தண்ணீர், பழங்கள், பழச்சாறு, நிழல் உள்ள இடங்கள் ஆகியவற்றின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தர்மபுரி டவுன் நான்கு ரோடு பகுதியிலுள்ள, சிக்னலில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் சூழலில், வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் நலன் கருதி, தனியார் அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், நான்கு ரோடு சிக்னலில் உள்ள, 4 பக்கங்களிலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க, கூரையாக கிரீன் பந்தல் அமைத்து வருகின்றனர். இது, வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us