ADDED : ஜூலை 30, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம், காரிமங்கலம், அடுத்த மாட்லாம்பட்டி பிரிவு சாலையில், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த முயற்சித்தனர்.
வாகனம் நிற்காமல் சென்தால், சந்தேகமடைந்த போலீசார் அக்காரை  துரத்தினர்.  காரில் இருந்தவர்கள்  காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பினர். காரை சோதனையிட்டபோது, 20-க்கும் மேற்பட்ட மூட்டைகளில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

