ADDED : டிச 19, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டா-ரத்தில், கடந்த சில நாட்களாக இரவில் குளிரும், அதிகாலையில் பனிப்பொழிவும் உள்ளது.
நேற்று அதிகாலை, 5:00 முதல், 9:30 மணி வரை, அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், சாலையில், பஸ், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. நடைப்பயிற்சி மேற்-கொள்பவர்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாண-வர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் அவதியடைந்தனர்.

