ADDED : டிச 07, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அதிகாலை முதல் நில-விய கடும் பனிப்பொழிவால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில், மாத தொடக்கத்தில் கன-மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பின. இந்நிலையில் தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர் தொப்பூர், பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதி-களில் நேற்று அதிகாலை முதல் காலை, 8:00 மணி வரை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால், பெங்களூரு -
சேலம் தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரி-யாத அளவிற்கு, பனிப்பொழிவு நிலவியதால்,
வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி இயக்கினர். மேலும், விவ-சாய நிலங்களிலும், பனி படர்ந்து
காணப்பட்டது. கடும் குளிர் காரணமாக, பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.