ADDED : மே 15, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதிசந்திரா வரவேற்றார்.
மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து பேசினார். முன்னதாக, நான் முதல்வன் -உயர்வுக்கு படி என்ற மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் கையேட்டை மாணவர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குனர் சிந்தியா செல்வி, மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.