sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஓசூர் மாநகராட்சி சிறப்பு ஆர்.ஐ., குற்றச்சாட்டால் பணியிட மாற்றம்

/

ஓசூர் மாநகராட்சி சிறப்பு ஆர்.ஐ., குற்றச்சாட்டால் பணியிட மாற்றம்

ஓசூர் மாநகராட்சி சிறப்பு ஆர்.ஐ., குற்றச்சாட்டால் பணியிட மாற்றம்

ஓசூர் மாநகராட்சி சிறப்பு ஆர்.ஐ., குற்றச்சாட்டால் பணியிட மாற்றம்


ADDED : அக் 10, 2025 01:29 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, ஓசூர் மாநகராட்சியில் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, சிறப்பு ஆர்.ஐ., பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி சிறப்பு ஆர்.ஐ.,யாக இருந்தவர் சுரேஷ்குமார். இவர், கடந்த, 30 ஆண்டுகளாக ஓசூர் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி உள்ளார். இவர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த நிலையிலும், இடமாற்றம் செய்யப்படவில்லை. சொத்துவரி போடுவதில், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மதிப்பு குறைத்து போட்டு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து நம், 'காலைக்கதிர்' நாளிதழிலும் செய்தி வெளியானது. மேலும், தி.மு.க., பிரமுகரும், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருமான மாதேஸ்வரனும், இது குறித்து, 'உள்ளாட்சிகள் அமைப்பு முறை மன்ற நடுவம்' சென்னையில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஆஜரான, ஓசூர் உதவி கமிஷனர் நாராயணன் மற்றும் அலுவலர்கள், சுரேஷ்குமாரால், ஓசூர் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓசூர் மாநகராட்சி சிறப்பு ஆர்.ஐ., சுரேஷ்குமாரை, கிருஷ்ணகிரி நகராட்சி சிறப்பு ஆர்.ஐ.,யாக பணியிட மாற்றம் செய்து, நகராட்சிகள் நிர்வாக இணை இயக்குனர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us