ADDED : டிச 16, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சி, சந்தை-தோப்பு இருளர் காலனியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஓட்டு வீடு, குடிசை வீட்டில் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், 2 புளிய மரங்கள் உள்ளன. மழை காலங்களில் மரத்தின் கிளைகள் முறிந்து வீடுகளின் மேல் விழுகிறது. இதனால் வீடுகள் சேத-மாகிறது. எனவே, குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு புறம்-போக்கு இடத்திலுள்ள இந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். இதுகுறித்து வருவாய் துறைகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து மழை காலங்களில் பயத்துடனே வீட்டில் உறங்க வேண்டிய நிலை உள்-ளது. ஆகவே, குடியிருப்பு பகுதியிலுள்ள மரங்களை வெட்டி அகற்ற, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்

