/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
/
மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
ADDED : டிச 11, 2025 06:41 AM

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் கலை-வாணன் தலைமையேற்று பேசுகையில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், ஒவ்வொ-ருவரும் பிறர் உரிமைகளை மதித்து நடக்க வேண்டியது, சமூக முன்னேற்றத்திற்கு அவ-சியம் என்றார். பின் ஆசிரியர்கள், மாணவர்கள் மனித உரிமைகளை காக்கவும், சமத்துவம், சுதந்-திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை பேணவும் உறுதிமொழி ஏற்றனர்.
இதில் உதவி தலைமை ஆசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்தீபன், பட்டதாரி ஆசிரியர் ராஜா-மணி, உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன் ராம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

