sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புதிய தொழில்நுட்ப முறையில் துவரை சாகுபடிக்கு யோசனை

/

புதிய தொழில்நுட்ப முறையில் துவரை சாகுபடிக்கு யோசனை

புதிய தொழில்நுட்ப முறையில் துவரை சாகுபடிக்கு யோசனை

புதிய தொழில்நுட்ப முறையில் துவரை சாகுபடிக்கு யோசனை


ADDED : மே 29, 2024 07:37 AM

Google News

ADDED : மே 29, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு : பருவமழை தவறினாலும், பருவம் போகாமல் புதிய தொழில்நுட்ப முறையில், விவசாயிகள் துவரை சாகுபடி செய்யலாம் என, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

இது குறித்து, பாலக்கோடு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அருள்மணி தெரிவித்ததாவது:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த, விவசாயிகள் துவரை சாகுபடி செய்ய, பருவமழை தவறினாலும், பருவம் போகாமல், நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய முடியும். துவரை நாற்று நடவு முறை சாகுபடிக்கு, ஏக்கருக்கு, ஒரு கிலோ விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதையுடன், 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது, 4 கிராம் டைகோடெர்மா விரிடி இதில், ஏதாவது ஒன்றில் விதை நேர்த்தி செய்து, 24 மணி நேரத்துக்கு பிறகு, ஒரு பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நாற்று நடுவதற்கு சில நாட்கள் முன், இளம் வெயிலில் வைத்து, கடினப்படுத்திய பின், நடவு செய்தல் நல்லது. எனவே, விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் பருவமழை தவறினாலும், இந்த புதிய தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து, அதிக மகசூல் பெற முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us