ADDED : டிச 31, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 20.06 லட்சம் ரூபாய் அளவுக்கு பட்டுக்கூடு ஏலம் நடந்தது.
தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். தொடர்ந்து விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. கடந்த, 28 அன்று, 38 பேரும் நேற்று, 49 விவசாயிகள் ஏலத்திற்கு வந்திருந்தனர். இவர்கள், 90 குவியல்களாக, 3,424 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இதில், 435 முதல், 671 வரை சராசரியாக, 576 ரூபாய்க்கு பட்டு கூடுகள் ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 20.06 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 30,096 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.