sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வரட்டாறு தடுப்பணை நீர்மட்டம் தொடர்மழையால் அதிகரிப்பு

/

வரட்டாறு தடுப்பணை நீர்மட்டம் தொடர்மழையால் அதிகரிப்பு

வரட்டாறு தடுப்பணை நீர்மட்டம் தொடர்மழையால் அதிகரிப்பு

வரட்டாறு தடுப்பணை நீர்மட்டம் தொடர்மழையால் அதிகரிப்பு


ADDED : அக் 12, 2024 01:03 AM

Google News

ADDED : அக் 12, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரட்டாறு தடுப்பணை நீர்மட்டம்

தொடர்மழையால் அதிகரிப்பு

அரூர், அக். 12-

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, சித்தேரி மலையிலிருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால் தாதரவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும்.

கடந்த, 7ல் தடுப்பணையின் மொத்த கொள்ளளவான, 34.5 அடியில், 29 அடிக்கு தண்ணீர் இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது.

மேலும், சித்தேரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து வரத் துவங்கியது. இதனால், தடுப்பணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி, 30 அடிக்கு தண்ணீர் உள்ளது. தடுப்பணைக்கு, 10 கனஅடி நீர் வரத்து வருகிறது. கடந்தாண்டு போதிய மழை பெய்யாததால் தடுப்பணை நிரம்பவில்லை. இதனால் தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கவில்லை. வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கவுள்ள நிலையில், நடப்பாண்டு தடுப்பணை நிரம்ப வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us