ADDED : ஜூலை 09, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூரில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன், சாலை விபத்தை தடுக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து சிக்னல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துவது குறித்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமையில், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், அரூர் டி.எஸ்.பி., ஜெகன்நாதன், மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் அரூர் பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை எதிரில், திரு.வி.க., நகர் பஸ் நிறுத்தம், கச்சேரிமேடு, கவண் மருத்துவமனை எதிரில், 4 ரோடு, நடேசா பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.