/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஐ.டி.ஐ., முன்னாள் மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
/
ஐ.டி.ஐ., முன்னாள் மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
ஐ.டி.ஐ., முன்னாள் மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
ஐ.டி.ஐ., முன்னாள் மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
ADDED : ஏப் 14, 2025 07:18 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், தனியார் ஐ.டி.ஐ.,யில் கடந்த, 1997 முதல், 2001 வரை படித்த மாணவ, மாணவியர், தற்போது பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், 28 ஆண்டுகளுக்கு பின், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சசிக்குமார் வரவேற்றார். இதில், 40 முன்னாள் மாணவ, மாணவியர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் தாங்கள் ஐ.டி.ஐ.,யில் படித்தபோது நடந்த நினைவுகளையும், வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வருவதையும், குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களையும், பழைய, புதிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு, குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து, அணை பூங்காவில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

