/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியில்லை
/
மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியில்லை
மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியில்லை
மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியில்லை
ADDED : ஜன 21, 2025 06:18 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டம், தடங்கத்தில் ஜன., 22 (நாளை) மண்டு மாரி-யம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதாக அறிவித்து, துண்டு பிரசுரங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் செய்தி பரப்பி வருவதாக தெரிகி-றது. 2024 நவ., 28ல் -வழங்கப்பட்டுள்ள அரசின் நிலையான வழி-காட்டு நெறிமுறைகளின் படி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த உரிய அரசாணை பெற்று, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பின்-னரே, போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
இந்நிலையில், ஜன., 22 அன்று மண்டு மாரியம்மன் கோவில் திரு-விழாவை முன்னிட்டு, தடங்கத்தில், ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு
போட்டிகள் நடத்தப்பட்டால், அதில், தொடர்புடைய நபர்கள் மீது, சட்டப்படியான உரிய நட-வடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.

