/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சித்தேரி மலை பாதையில் மண் சரிவு 5வது நாளாக போக்குவரத்து பாதிப்பு
/
சித்தேரி மலை பாதையில் மண் சரிவு 5வது நாளாக போக்குவரத்து பாதிப்பு
சித்தேரி மலை பாதையில் மண் சரிவு 5வது நாளாக போக்குவரத்து பாதிப்பு
சித்தேரி மலை பாதையில் மண் சரிவு 5வது நாளாக போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 18, 2024 01:44 AM
சித்தேரி மலை பாதையில் மண் சரிவு
5வது நாளாக போக்குவரத்து பாதிப்பு
அரூர், டிச. 18-
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரிமலை, கடல் மட்டத்திலிருந்து, 3,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சித்தேரி மலை பஞ்.,ல், 62 கிராமங்கள் உள்ளன. பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் போது, சித்தேரி மலைப்பாதையின் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அவை சீரமைக்கப்பட்ட நிலையில் கடந்த, 13ல் பெய்த மழையால் மீண்டும், கொண்டை ஊசி வளைவில், 21வது கி.மீ.,ல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், 5வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில், பொக்லைன் வாகனம் மூலம் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவம் உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு செல்ல முடியாததுடன், விளைபொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ள மலைவாழ் மக்கள், சாலை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்கா விட்டால், போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.