/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மஹா சிவராத்திரி கோவிலில் வழிபாடு
/
மஹா சிவராத்திரி கோவிலில் வழிபாடு
ADDED : மார் 10, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, அன்னை வர்ணீஸ்வரி உடனமர் வர்ணீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு பிரதோஷ பூஜையுடன், சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சிவராத்திரி பூஜையாக இரவு, 9:00 மணிக்கு முதல் கால பூஜை, நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, அதிகாலை, 2:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 5:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வாணீஸ்வரர் கோவிலிலும் மஹா சிவராத்திரி விழா நடந்தது.

