sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் துண்டு இறுக்கியதில் உயிரிழப்பு

/

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் துண்டு இறுக்கியதில் உயிரிழப்பு

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் துண்டு இறுக்கியதில் உயிரிழப்பு

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் துண்டு இறுக்கியதில் உயிரிழப்பு


ADDED : ஆக 29, 2025 01:32 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் :அரூர் அடுத்த கூடலுாரை சேர்ந்தவர் நைனாமலை, 50. இவர், தேன் எடுத்தல் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஜெயசீலன் என்பவரது தோட்டத்தில் இருந்த புளிய மரத்தில் தேன் எடுக்க கழுத்தில் துண்டை கட்டி கொண்டும், அதன் மற்றொரு முனையில் சில்வர் பக்கெட்டை கட்டிக் கொண்டும் மேலே ஏறினார்.

கீழே அவரது மனைவி குமாரி இருந்துள்ளார். மரத்தில் நைனாமலை தேன் எடுக்கும்போது தேனீக்கள் கொட்டியதால் மரத்திலிருந்து வேகமாக கீழே இறங்கினார். அப்போது, மரக்கிளையில் சில்வர் பக்கெட் மாட்டிக் கொண்டதால், மறுமுனையில் கழுத்தில் இருந்த துண்டு நைனாமலையின் கழுத்தை இறுக்கியது. இதில், அவர் மரத்தில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். அரூர் தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மரத்திலிருந்து மீட்டு கீழே கொண்டு வந்தனர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us