ADDED : ஆக 03, 2026 01:53 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்த மிட்டநுால-ஹள்ளியை சேர்ந்தவர் வெள்ளையன், 60, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் காலை வெங்கடம்பட்டியை சேர்ந்த வெங்க-டம்மாள் என்பவரின் நிலத்தில் மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஒரு தேக்கு மரத்தில் ஏறி, கிளைகளை கழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தவறி விழுந்ததில் படுகாயமடைந்து பலியானார். அதியமான்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
