ADDED : ஜூன் 30, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில், திருவாசகம் பாடிய மாணிக்க-வாசகர் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.
இந்நாளில், அனைத்து சிவ தலங்களிலும் மாணிக்கவாசகருக்கு குருபூஜை நடந்து வருகிறது. இதில், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, ஆத்மபரிமளபுரியின் இந்திர பீடாதிபதி தவத்திரு ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சுவாமிகள், ஆதீனம் அருணை ஸ்ரீலஸ்ரீ அழகானந்த சுவாமிகள், மாணிக்கவாசகர் மற்றும் நடராஜர் திருமடம் தம்மனம்-பட்டியில் உள்ளது. இதில், மாணிக்கவாசகரின், 101ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. மாணிக்கவாசகருக்கு, 18 வகை-யான அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்காரம் நடந்தன. அடுத்த நிகழ்வாக, மகேஸ்வர பூஜை நடந்தது. ஏற்பாடுகளை சிவன் கோவில் நிர்வாகிகள் மற்றும் தம்மணம்பட்டி ஊர் பொது-மக்கள் செய்திருந்தனர்.