ADDED : ஜன 14, 2025 02:11 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்துள்-ளனர். இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு சாமந்தி பூ விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறிய தாவது: பொங்கல் பண்டிகை வரு-வதால், சாமந்தி பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும். இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் சாமந்தி பூவை சாகுபடி செய்-துள்ளனர். சமீபத்தில் பெய்த
தொடர்மழையால், பல இடங்களில் பூக்கள் அழுகியதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் வரை, ஒரு கிலோ சாமந்தி பூக்களை வியாபா-ரிகள் கிலோ, 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர்.
பொங்கலை-யொட்டி நேற்று, ஒரு கிலோ சாமந்தி, 140 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்-ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.இருந்த போதிலும், பூ கடைகளில், ஒரு கிலோ சாமந்தி பூ, 320 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

