/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடத்துாரில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
கடத்துாரில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : அக் 17, 2024 01:29 AM
கடத்துாரில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 17---
கடத்துார் ஒன்றியம், கர்த்தானுார் சமுதாய கூடத்தில், கடத்துார் கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், அவைத்தலைவர் ஜெயராமன் தலைமையில்
நடந்தது.
மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.
கூட்டத்தில், மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் துரை, மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல், மாவட்ட சார்பு அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இணைச் செயலாளர் தாமோதரன் நன்றி கூறினார்.
இதேபோன்று, பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியம், பேரூராட்சி செயல்வீரர்கள் கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டியிலும் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி செயல்
வீரர்கள் கூட்டம் பொம்மிடியிலும்
நடந்தது.