/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : டிச 23, 2024 09:43 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., செயலாளரும், பாலக்கோடு எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின், 37ம் ஆண்டு நினைவு நாள், அ.தி.மு.க., சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுகிறேன். இதில், அந்தந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். அதேபோல், தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில் காலை, 10:30 மணிக்கு எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.