sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குடிநீர் வரல; எம்.எல்.ஏ.,விடம் புகார்

/

குடிநீர் வரல; எம்.எல்.ஏ.,விடம் புகார்

குடிநீர் வரல; எம்.எல்.ஏ.,விடம் புகார்

குடிநீர் வரல; எம்.எல்.ஏ.,விடம் புகார்


ADDED : நவ 29, 2025 01:06 AM

Google News

ADDED : நவ 29, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தொப்பூர் அருகே, கருங்கல்லுாரில் உள்ள பகுதிக்கு, 6 மாதங்களாக ஒகேனக்கல் குடிநீர் வரவில்லை, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம், குறைகளை கேட்டறிய பாப்பிரெட்டிபட்டி தொகுதி அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி நேற்று சென்றிருந்தார். அப்போது தர்மபுரி ஒன்றியம், கோடுஹள்ளி பஞ்.,க்குட்பட்ட கருங்கல்லுாரில், 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர்கள், 'எங்கள் கிராமத்தில் குடிநீர், தெரு விளக்கு, மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகிறோம். கடந்த, 6 மாதங்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இப்பகுதிக்கு வரவில்லை. இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என, குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இது குறித்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக, எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us