sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குளித்தலை மனநல காப்பகத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்

/

குளித்தலை மனநல காப்பகத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்

குளித்தலை மனநல காப்பகத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்

குளித்தலை மனநல காப்பகத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்


ADDED : ஜூலை 30, 2025 02:01 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, புழுதேரியில் இயங்கி வரும் சாந்திவனம் மனநல காப்பகத்தை, கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மாவட்ட மனநல மருத்துவர் பாரதி கார்த்திகா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மனநல காப்பகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட மனநோயாளிகளுக்கு சிகிச்சை, பராமரிப்பு வழங்கப்படுகிறது. மேலும் திறன் பயிற்சி, தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இங்கு மனநலம் பாதிக்கப்பட்டு குணமாகி வருபவர்களுக்கு பாக்கு மட்டை தட்டு தயாரித்தல், துணிகளில் ஓவியம் வரைதல், தையல் பயிற்சி, துணிகளில் கால்மிதிகள் தயாரித்தல், அலங்கார அணிகலன்கள் செய்தல், கால்நடை பராமரிப்பு, விவசாய பயிற்சி, புத்தகங்கள் வாசித்தல், யோகா தியானம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சிகிச்சை பெற்று வருபவர்களிடம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மனநல மருத்துவர் பாரதி கார்த்திகா ஆகியோர் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி, உணவு, சுற்றுப்புற துாய்மை சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us