தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைக்கு உத்தரவு

பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைக்கு உத்தரவு

பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைக்கு உத்தரவு


ADDED : ஜூலை 06, 2026 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்டது கோட்-டப்பட்டி போலீஸ் ஸ்டேஷன். தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த காலங்களில், சேலம், திரு-வண்ணாமலை, விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து கள்ளச்-சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. போலீசாரின் தொடர் நடவடிக்-கையால் கள்ளச்சாராயம் விற்பனை

கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தர்மபுரி எஸ்.பி., அருண் கபிலன் வந்தார். அவர், சட்டம் -ஒழுங்கு, நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் காவல் நிலைய பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்-கொண்டார்.

இந்த ஆய்வின்போது, குற்றச் சம்பவங்களை தடுப்பது, சந்துக்க-டைகளில் மது விற்பனையை கட்டுப்படுத்துவது, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை விசாரித்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். பின், அங்கிருந்து மதியம், 1:00 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us