ADDED : ஜூலை 06, 2026 01:43 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. 2ம் தாள் தேர்வு, நேற்று தர்ம-புரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழைய தர்-மபுரி அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என மொத்தம், 21 தேர்வு மையங்களில் நடந்-தது.
இத்தேர்வு எழுத மொத்தம், 5,678 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 5,495 தேர்வு
எழுதினர், 183 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 22 மையங்களில் தேர்வு நடந்தது. நேற்று நடந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, 5,603 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5,398 பேர் தேர்வெழுதினர். 205 பேர் தேர்வு எழுதவில்லை.
