/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெயின்டர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
/
பெயின்டர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : ஆக 10, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அருகே, கோவிலுக்கு வந்த பெயின்டர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.கோவை நேரு நகரை செந்தில்குமார், 45, பெயின்டர். நேற்று குடும்பத்துடன் பண்ணாரி கோவிலுக்கு வந்தார். சுவாமி தரிசனம் செய்து விட்டு, பிரசாதம் வாங்கி வரும் போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனே மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.