sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நடு ரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி

/

நடு ரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி

நடு ரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி

நடு ரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி


ADDED : ஆக 26, 2025 01:59 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, அரசு புறநகர் பஸ் பழுதாகி, நடுரோட்டில் நின்றதால், பயணிகள் அவதியடைந்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து, தர்மபுரிக்கு அரசு புறநகர் பஸ் நேற்று காலை, 8:30 மணிக்கு வந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, எஸ்.பி., அலுவலகம் முன்புள்ள வேகத்தடையை கடந்தபோது, பஸ்சின் ஏர் ஓஸ் கட்டானதால், பஸ் நகராமல் நின்றது. இதனால், பஸ்சில் பயணம் செய்த

பயணிகள் தவித்தனர்.

அதையடுத்து, அவ்வழியாக வந்த மற்றொரு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தர்மபுரி போக்குவரத்து கழக அலுவலகத்திலிருந்து வந்த ஊழியர்கள் பஸ்சை சரிசெய்ய, டிப்போவிற்கு எடுத்து சென்றனர். காலை நேரத்தில் பரபரப்பாக இருந்த, சேலம் - தர்மபுரி நெடுஞ்சாலையில், நடுரோட்டில் பஸ் பழுதாகி நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொலைதுாரம் செல்லும் புறநகர் பஸ்களை, அவ்வப்போது பழுது நீக்கி, இயக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us