sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மீனாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் கடந்து செல்ல முடியாமல் முடங்கும் மக்கள்

/

மீனாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் கடந்து செல்ல முடியாமல் முடங்கும் மக்கள்

மீனாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் கடந்து செல்ல முடியாமல் முடங்கும் மக்கள்

மீனாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் கடந்து செல்ல முடியாமல் முடங்கும் மக்கள்


ADDED : ஜன 02, 2025 12:14 AM

Google News

ADDED : ஜன 02, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போதக்காட்டில் மீனாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், ஆபத்தான நிலையில், ஆற்றுத் தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் கிராம மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், போதக்காடு ஊராட்சியில், கரியதாதனுார், மாரியம்மன் கோவிலுார், போதக்காடு முல்லை நகர் ஆகிய, நான்கு குக்கிராமங்கள் உள்ளன.

இவையனைத்தும் ஏற்காடு மலையின் பின்பகுதியில் அமைந்துள்ளன. 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இதில் மாரியம்மன் கோவிலுார் பகுதியில் மட்டும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் மீனாறு, இக்கிராமத்தின் வழியாக செல்கிறது. இந்த ஆறு கிராமத்தை இரண்டாகப் பிரிக்கிறது. இதில் ஆற்றின் மறுகரையில் ஏற்காடு மலையடிவாரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இம் மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மீனாற்றைக் கடந்துதான், போதக்காடு, பையர்நத்தம் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டிக்கு செல்ல வேண்டும். பஸ் வசதி கிடையாது. இருசக்கர வானங்களை மட்டுமே நம்பி உள்ளனர். மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்லும் போதும், வறண்ட நிலையிலும், மக்கள் எளிதாக ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.

மீனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, ஆற்றைக் கடக்க முடிவதில்லை. இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியர், விவசாயிகள் என அனைவரும் வீட்டோடு முடங்கிக் கிடக்கின்றனர்.

கடந்த மாதம் 'பெஞ்சல்' புயலால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள், மாணவர்கள், 10 நாட்களுக்கு மேலாக ஆற்றைத் தாண்டி வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.

தொடர்ந்து தற்போதும் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், கயிறு கட்டி ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us