sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கால்நடைகளுடன் மக்கள் சாலை மறியல்

/

வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கால்நடைகளுடன் மக்கள் சாலை மறியல்

வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கால்நடைகளுடன் மக்கள் சாலை மறியல்

வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கால்நடைகளுடன் மக்கள் சாலை மறியல்


ADDED : டிச 20, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிகால்நடைகளுடன் மக்கள் சாலை மறியல்

அரூர், டிச. 20-

அரூர், அம்பேத்கர் நகர் புது காலனி அருகே, நர்சனேரி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அம்பேத்கர் நகர் மக்கள், தாங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். பல ஆண்டுகளாக ஏரிக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்லும் வழிப்பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்துள்ளார். வழிப்பாதை மற்றும் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை, 8:30 மணிக்கு, அரூர் - திருவண்ணாமலை சாலையில், மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர், தாசில்தார் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us