ADDED : டிச 13, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொடர் மழையில் மக்கள் அவதி
தர்மபுரி, டிச. 13-
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தினமும் அதிகாலை முதல் தொடர்ந்து பெய்யும் மழையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று காலை கன மழை பெய்த நிலையில், தங்கள் குழந்தைகளை மழையிலேயே பள்ளிக்கு பெற்றோர் அழைத்து வந்து விட்டனர். பல்வேறு பணிக்கு செல்லும் மக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

