ADDED : அக் 10, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் குறைதீர் முகாம்
தர்மபுரி, அக். 10-
தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் மீதான, குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையில் நடக்கிறது.
தர்மபுரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. இதில், 68 மனுக்கள் பெறப்பட்டு, 65 மனுக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.