/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி சி.இ.ஓ.,விடம் மக்கள் கோரிக்கை
/
அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி சி.இ.ஓ.,விடம் மக்கள் கோரிக்கை
அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி சி.இ.ஓ.,விடம் மக்கள் கோரிக்கை
அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி சி.இ.ஓ.,விடம் மக்கள் கோரிக்கை
ADDED : நவ 14, 2024 07:04 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பி.கொல்லஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சோம-னஹள்ளி மக்கள், சி.இ.ஓ.,விடம் அளித்த மனுவில் தெரிவித்துள்-ளதாவது:
தர்மபுரி மாவட்டம், பி.கொல்லஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சோம-னஹள்ளியில், அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த, 10 ஆண்டுக-ளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆங்கில வழி கல்வியும் நடக்கிறது. இப்பள்ளி ஊரை விட்டு தள்ளி, அரை கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளதால், இங்கு மது அருந்தும் சிலரால், மாணவியருக்கு பாதிப்பு
ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பள்ளியை சுற்றி சுற்-றுச்சுவர் அமைக்க வேண்டும். பள்ளி அருகிலேயே தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும். மாணவர்கள் தொலை துாரத்தில் இருந்து வருவதால், அவர்கள் சைக்கிள்
நிறுத்தும் இடத்துக்கு நிழற்கூடம் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

