/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
/
ஒகேனக்கல் சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
ஒகேனக்கல் சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
ஒகேனக்கல் சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
ADDED : ஜன 05, 2026 07:17 AM

ஒகேனக்கல்: ஒகேனக்கல் சாலையோரத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி, துாய்மை படுத்தும் பணியில், ஒகேனக்கல் வனத்துறை-யினர் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், ஒகேனக்-கல்லில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டிய சாலையோரத்தில், பிளாஸ்டிக் குப்பை மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போட்டு விட்டு சென்று விடு-கின்றனர். இதை கட்டுப்படுத்தும் வகையில், விடுமுறை நாட்களில் வனத்துறையினர் சாலை-யோரத்தில் துாய்மை பணியில் ஈடுபடுகின்றனர்.
நேற்று, ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவ-குமார் தலைமையிலான வனக் குழுவினர் சாலை ஓரங்களில் சுற்றுலா பயணிகளால் வீசி செல்லப்பட்ட பிளாஸ்டிக் குப்பை மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை சேக-ரித்து துாய்மை பணியில் ஈடுபட்டுனர். ஆலம்-பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், சின்ன ஆஞ்ச-நேயர் கோயில் உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்-டிய சாலைகளில் உள்ள குப்பைகளை சேகரித்து, 20க்கும் மேற்பட்ட சாக்கு பைகளில் நிரப்பி அப்பு-றப்படுத்தினர்.

