ADDED : ஜூலை 14, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி, பா.ம.க., மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளரும் தர்மபுரி, பா.மக., - எம்.எல்.ஏ.,வுமான வெங்கடேஷ்வரன் தலைமையில்
தர்மபுரியில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.பி.,க்கள் செந்தில், பாரிமோகன், மாநில துணை தலைவர்கள் சாந்தமுர்த்தி, பாடி-செல்வம், மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில், காவிரி உபரி நீரை, ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தர்மபுரியில் சிப்காட் பணிகள் தொடங்க வேண்டும். பா.ம.க., உறுப்-பினர் சேர்க்கை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன. நகர செயலாளர்கள் வெங்கடேசன், சத்தியமூர்த்தி ஆகியோர் நன்றி கூறினர்.