ADDED : செப் 15, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி டவுனை சேர்ந்த, 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தர்மபுரியை சேர்ந்த, 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு சிறுமியிடம் தனியாக பேச வேண்டுமென, கட்டாயப்படுத்தி காரில் அழைத்துச் சென்று, முத்தம் கொடுத்துள்ளார்.
இது குறித்து, சிறுமி அளித்த புகார்படி, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.