sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரயில் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

/

ரயில் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

ரயில் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

ரயில் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு


ADDED : அக் 13, 2025 02:24 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: நாடு முழுவதும் அக்., 20 அன்று தீபாவளி பண்டிகை கொண்-டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

இதில், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் வழியாக, பண்டிகை கால சிறப்பு ரயில்கள் சென்று வருகின்றன. இதில், பயணம் செய்ய வரும் பயணிகள் எளிதில் தீ பற்ற கூடிய பொருட்களை குறிப்பாக, பட்டாசு, காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், தீப்பெட்டி, சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர்கள் உள்-ளிட்ட பொருட்களை கொண்டு செல்வது பயணிகள் பாதுகாப்-புக்கு அச்சுறுத்தல் மற்றும் சட்டபடி குற்றம். எனவே, ரயில் பய-ணத்தின் போது அவற்றை எடுத்து செல்லக்கூடாது என, தர்மபுரி ஆர்.பி.எப்., எஸ்.ஐ., நாராயணா ஆச்சர்யா தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் பய-ணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு, ரயில் பெட்டிகளில் ஜன்னல் ஓரம் பயணம் செய்யக்கூடாது. ரசாயனத்தை ஊசிகள் மூலம் பிஸ்-கட்களில் செலுத்தி, அதை கொடுத்து பலர் திருட்டில் ஈடுபடு-வதால், சக பயணிகளிடம் தின்பண்டங்கள் வாங்கி உண்பதை தவிர்க்க, ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us