sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அமைக்க பூஜை

/

பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அமைக்க பூஜை

பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அமைக்க பூஜை

பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அமைக்க பூஜை


ADDED : ஏப் 21, 2025 07:59 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் மற்றும் நிழல் கூடம் அமைக்க நேற்று பூஜை நடந்தது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் கடந்த, 2020 - 21ம் நிதியாண்டில் மூலதன மானிய திட்டத்தில், ரூபாய், 4.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்ட் கடந்த, அக்., 24ல், அமைச்சர்கள் நேரு மற்றும் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தனர். சில மாதங்களுக்கு முன் பஸ் ஸ்டாண்ட் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் கட்டுவதில், தி.மு.க., - பா.ம.க.,வினருக்கு இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. பென்னாகரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு பொதுநிதியிலிருந்து, 46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், நுழைவாயில் மற்றும் நிழல் கூடம் அமைக்கும் பணிக்கு பூஜை நேற்று, பென்னாகரம் எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி தலைமையில் நடந்தது.

நிகழ்சியில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி மற்றும் எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், தாசில்தார் பிரசன்ன மூர்த்தி, பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல் அலுவலர் செந்தில்குமார், டி.எஸ்.பி., சபாபதி உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர். ஆனால், பா.ம.க., - எம்.எல்.ஏ., நடத்திய நிகழ்ச்சிக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., - கம்யூ., - காங்., உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டது, பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us