நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தங்களது ஓட்டுகளை தபால் மூலம் செலுத்தி வருகின்றனர்.
காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை இவர்கள் ஓட்டளிக்க, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தபால் ஓட்டு மையம் செயல்படுகிறது. இதில் நடக்கும் ஓட்டுப்பதிவுகளை, தர்மபுரியில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இம்முகாமை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார். அப்போது, அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

