sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மரவள்ளியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

/

மரவள்ளியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

மரவள்ளியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

மரவள்ளியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு


ADDED : அக் 03, 2024 01:31 AM

Google News

ADDED : அக் 03, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரவள்ளியில் மாவு பூச்சி நோய் தாக்குதல்

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

அரூர், அக். 3-

தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, வேட்ரப்பட்டி, கீழ்மொரப்பூர், எம்.வெளாம்பட்டி, செட்ரப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். மரவள்ளியில் மாவுப் பூச்சி மற்றும் செம்பேன் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மரவள்ளியில் தாய்லாந்து வெள்ளை, தாய்லாந்து கருப்பு, முள்ளுவாடி, ரோஸ் உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது, 10 மாதங்கள் வயதுடைய மரவள்ளிக்கிழங்கு செடியில் மாவுப் பூச்சி மற்றும் செம்பேன் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதுடன், இலைகள் பழுத்து உதிர்வதால் மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது.

இதனால் நேரம் மற்றும் செலவு குறைகிறது. அதிக பரப்பில் மரவள்ளிக்கிழங்குக்கு மருந்து தெளிப்பதாக இருந்தால் மட்டுமே ட்ரோன்கள் எளிதாக கிடைக்கிறது. குறைந்த பரப்பில் மருந்து தெளிக்கும் பணிக்கு அதன் உரிமையாளர்கள் வருவதில்லை. இது வரை, மூன்று முறை பூச்சி மருந்து அடித்தும் நோய்த் தாக்குதல் குறையவில்லை. எனவே, நோயை கட்டுப்படுத்த வேளாண் துறை மூலம் ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us