/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மரவள்ளியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு
/
மரவள்ளியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு
மரவள்ளியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு
மரவள்ளியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு
ADDED : அக் 03, 2024 06:48 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பை-நல்லூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, வேட்ரப்பட்டி, கீழ்மொரப்பூர், எம்.வெளாம்பட்டி, செட்ரப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கி-ழங்கு சாகுபடி செய்துள்ளனர். மரவள்ளியில் மாவுப் பூச்சி மற்றும் செம்பேன் நோய் தாக்கு-தலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்-ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மர-வள்ளியில் தாய்லாந்து வெள்ளை, தாய்லாந்து கருப்பு, முள்ளுவாடி, ரோஸ் உள்ளிட்ட ரகங்-களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.தற்போது, 10 மாதங்கள் வயதுடைய மரவள்ளிக்-கிழங்கு செடியில் மாவுப் பூச்சி மற்றும் செம்பேன் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதன் தாக்-கத்தால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள-துடன், இலைகள் பழுத்து உதிர்வதால் மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது. இதனால் நேரம் மற்றும் செலவு குறைகிறது. அதிக பரப்பில் மரவள்ளிக்கிழங்குக்கு மருந்து தெளிப்பதாக இருந்தால் மட்டுமே ட்ரோன்கள் எளிதாக கிடைக்கிறது. குறைந்த பரப்பில் மருந்து தெளிக்கும் பணிக்கு அதன் உரிமையாளர்கள் வருவதில்லை. இது வரை, மூன்று முறை பூச்சி மருந்து அடித்தும் நோய்த் தாக்குதல் குறைய-வில்லை. எனவே, நோயை கட்டுப்படுத்த வேளாண் துறை மூலம் ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

