நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: சென்னையில், தமிழ்நாடு அரசு பொது நுாலக துறையின், 57வது தேசிய நுாலக வாரவிழா நடந்தது. அதில், தர்மபுரி மாவட்டம், அரூர் கிளை நுாலகத்தில், மூன்றாம் நிலை நுாலகராக பணிபு-ரியும் தும்பாராவ் என்பவர் அதிக நன்கொடை, புரவலர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கையில், சிறந்து விளங்கியமைக்கு அவரை பாராட்டி, பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ், நல்நுா-லகர் விருது வழங்கினார்.
இதையடுத்து, விருது பெற்ற நுாலகர் தும்பாராவை தர்மபுரி கலெக்டர் சாந்தி நேரில் அழைத்து பாராட்-டினார். நிகழ்ச்சியில், மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி, முதல் நிலை நுாலகர் மாதேஸ்வரன் மற்றும் நுாலக அலுவலர்கள் உடனிருந்தனர்.

