sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சந்தையில் விலை குறைவு; பூக்கள் விற்பனை உயர்வு

/

சந்தையில் விலை குறைவு; பூக்கள் விற்பனை உயர்வு

சந்தையில் விலை குறைவு; பூக்கள் விற்பனை உயர்வு

சந்தையில் விலை குறைவு; பூக்கள் விற்பனை உயர்வு


ADDED : ஏப் 14, 2025 07:18 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் செயல்படும் பூ சந்தையில், விற்பனை செய்யப்படும் பூக்கள் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பெங்களூரு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி, பூக்கள் தேவை அதிகரிதிருந்த நிலையில், விலை குறைந்து காணப்பட்டதால், அனைத்து பூக்களின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம், ஒரு கிலோ சன்னமல்லி, 700, குண்டுமல்லி, 500, கனகாம்பரம், 400, பன்னீர்ரோஸ், 180, பட்டன்ரோஸ், 200, சம்பங்கி, 240, சாமந்தி, 200, செண்டுமல்லி, 40 ரூபாய் என விற்பனையானது. நேற்று விலை குறைந்து, குண்டுமல்லி, 400, கனகாம்பரம், 400, சம்பங்கி, 200, பன்னீர்ரோஸ், 140, பட்டன்ரோஸ், 200, சாமந்தி, 160, செண்டுமல்லி, 30 மற்றும் துளசி ஒரு கிலோ, 50 ரூபாய் என விற்பனையானது.

ஓசூர் ரோஜாக்கள், ஒரு கட்டு, 100 முதல், 150 ரூபாய்க்கு விற்பனையானதால், பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். நேற்று, தர்மபுரி பூ சந்தையில், 15 டன் பூக்கள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us