ADDED : டிச 05, 2025 11:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள, எம்.எல்.ஏ., அலுவலகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், நேற்று துவங்கியது.
வரும், 6ம் தேதி வரை, 3 நாட்கள் நடக்கவுள்ள முகாமில், கிருஷ்-ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த தனியார் நிறு-வனத்திலுள்ள காலி பணியிடங்களுக்கு நேர்-காணல் நடக்கிறது. இதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., படித்த, 36 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்-டுள்ளது.

